மாநிலத்தில் இனி ஒவ்வொரு மாதமும், 4ம் சனிக்கிழமை அரசு விடுமுறை அளிப்பது குறித்து, கேரள அரசு விரைவில் முடிவு எடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
முழு விடுமுறை :
மாநிலத்தில் முக்கிய பண்டிகைகள் அல்லது தலைவர் பிறந்த தினங்களில், அரசின் சார்பாக முழு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளுக்கு மாதத்தில் 2 மற்றும் 4ம் சனிக்கிழமை விடுமுறை விடப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் கேரள மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும், மாதத்தில் 4ம் சனிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து அரசு விரைவில் ஆலோசனை நடத்த உள்ளது. வருகிற ஜனவரி 10ஆம் தேதி நடைபெறும் அரசின் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர்கள் முன்னிலையில் இது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!!
ஒருவேளை இந்தக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில், இனி ஒவ்வொரு மாதமும் 4ம் சனிக்கிழமை அரசின் பொது விடுமுறையாக இருக்கும். இதில், அரசு இது என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.