கேரள மாநிலத்தில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு 6 மாத காலம் மகப்பேறு விடுமுறை அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு :
கேரள மாநிலத்தில் சமீபத்தில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிப்பதாக அரசு அறிவித்திருந்தது. இதற்காக மாணவிகளின், வருகை பதிவு சதவீதத்தை 73 ஆக குறைப்பதாக அறிவித்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனைத் தொடர்ந்து, கேரளாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு 6 மாத காலம் வரை மகப்பேறு விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு 60 நாட்கள் வரை மாணவிகளுக்கு மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த, நிலையில் தற்போது இதனை உயர்த்த கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த விடுமுறையை மேற்கொள்ளும் மாணவிகள், உரிய மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்திய முதல் அரசு, என்ற பெருமையை கேரளா அரசு பெற்று இருப்பதாக, முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.