குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பலதரப்பட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. உத்திரப் பிரதேசத்தில் இந்த சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு 40,000 சிறுபான்மை அகதிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கேரளாவில் ஏற்கனவே குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது அது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும் அதனை தடை செய்ய கோரியும் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரளா அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
பாகிஸ்தான் சிறுபான்மை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் வரை ஓயமாட்டோம் – அமித் ஷா திட்டவட்டம்
ஜனவரி 10 முதல் குடியுரிமை சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது – மத்திய அரசு
குடியுரிமை சட்ட திருத்த மசோதா – முழு விளக்கம்