கேரளாவில் பார்வையற்ற மனிதருக்கு பேருந்து ஏறுவதற்கு உதவிய பெண்மணியின் கருணையை பாராட்டி வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
பார்வையற்றவருக்கு உதவி:
சுப்ரியா என்ற பெண்மணி ஆலுக்காஸ் குரூப்பில் விற்பனையாளராக மூன்று வருடங்களாகப் பணியாற்றுகிறார். தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் கடந்த வாரம் பேருந்தைத் துரத்தி, பார்வையற்ற வயது முதிர்ந்த மனிதருக்குப் பேருந்து ஏற உதவிய காணொளி வலைத்தளங்களில் அதிவேகமாக பரவியது.
இதனையடுத்து, அவரது கருணையை பாராட்ட ஆலுக்காஸின் தலைவர் அவரது வாடகை வீட்டிற்கு சென்றார். மேலும் அவருக்கு ஆனந்த அதிர்ச்சியளிக்க திருச்சூரில் உள்ளது தலைமை செயலகத்திற்கு வர சொன்னார்.
எதார்த்தமான கருணை மற்றும் பெருந்தன்மையான செயல்:
அங்கு அப்பெண்மணியின் கருணையை பாராட்டி அவருக்கு சொந்தமாக வீடு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் நூற்றுக்கணக்கான வேலையாட்கள் அவரை உற்சாகப் படுத்தியதும் அவர் ஆனந்தக் கண்ணீரில் நனைந்தார்.
எனது எதார்த்தமான செயல், இவ்வளவு அன்பு மற்றும் புகழை பெற்று தரும் என நினைத்துப் பார்க்கவில்லை என்று சுப்ரியா கூறியுள்ளார். மேலும் அவரது கருணை மற்றும் பெருந்தன்மை போன்ற செயலினால் சுப்ரியா பாராட்டத்தக்கவராகத் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்மை செய்தால் எப்படியாவது நமக்கு பலன் கிடைக்கும் என்னும் முதுமை மொழிக்கு இந்த நிகழ்வு எடுத்துகாட்டாக உள்ளது.