முழு ஊரடங்கு அறிவித்த முதலமைச்சர்!!!

0

கேரளாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் ரொம்பவே பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. தற்போது வரை அதாவது கடந்த மாதம் வாரத்தில் 2 நாள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களும் கடுமையான ஊரடங்கு பின்பற்று வருகின்றது. ஓணம் பண்டிகைக்காக சில தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. இருந்தும், எப்போதும் போலவே தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து தான் வருகிறது. கடந்த ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய இரு தினங்களில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு இருக்கிறது. இதனை தொடர்ந்து கட்டுப்பாடுகள் அதிகரிக்க இருப்பதாக கூறி இருக்கின்றனர். கொரோனா நெகடிவ் சான்றிதழ் மற்றும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லாமல் யாருமே வெளியே வர கூடாது என்று தெரிவித்துள்ளனர். நாளை, அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் செயல்படாது எனவும், பேருந்துகள் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நாளை கேரளா முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here