தமிழகத்தில் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா 2ஆம் பேரலை கோர தாண்டவம் ஆடுகிறது. இதன் காரணமாக கேரளாவில் முழு ஊரடங்கை கேரளா முதலவர் அமல் படுத்தினார்.
கொரோனா முதல் அலையில் இருந்து இன்னும் மீளாத நிலையில் தற்போது கொரோனா 2ஆம் தொற்று வேகமா பரவிவருகின்றது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கை 8மே முதல் அமலுக்கு கொண்டுவந்தார்.தென்னிந்தியா மாநிலங்களில் கேரளாவில் தான் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முழு ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருக்கும் போதே கடந்த ஒரு வாரமாக தினமும் 35 ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது என சுகாதார துறை தெரிவித்துள்ளது.முன்னதாக மாநிலத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்ததைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
முழு ஊரடங்கு மே 8ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டது. இந்த 8 நாட்கள் ஊரடங்கு வருகின்ற 16 ஆம் தேதி முடிவடையவிருந்தது, ஆனால் இப்போது அது மே 23 வரை அமலில் இருக்கும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்க பட்டுள்ளது .அதன் படி திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம்ஆகிய நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று ;கேரளா முதல்வர் கூறினார்.