5 ஆண்டுகள் கழித்து பாலியல் சீண்டலை ஒப்புக்கொண்ட பிரபல நடிகை – சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!!

0
"என் தரப்பு வாதத்தை கண்டிப்பா கேட்கணும்" - பாலியல்  வழக்கில் பாவனா மனுத்தாக்கல்!!

நடிகை பாவனா 5 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் சீண்டலுக்கு ஆளானது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட்டனர். தற்போது இந்த வழக்கு குறித்து பாவனா வெளிப்படையாக பேசியுள்ளார்

நடிகை பாவனா:

2017ஆம் ஆண்டு கேரளாவில் நடிகை பாவனாவை கடத்தி பாலியல் சீண்டல் செய்த குற்றத்துக்காக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த குற்றத்தில் மலையாள நடிகரான திலீப்புக்கும் தொடர்பு உள்ளதாக அவரும் கைது செய்யப்பட்டார். இதற்கு பிறகு திலீப்குமார் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் இந்த வழக்கு தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போது பாவனா இது குறித்து பேசியுள்ளார்.

பாவனா கூறியதாவது, இந்த பயணம் மிகவும் எளிதானது அல்ல, மிகவும் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்துள்ளேன். என் மீது இவர்கள் நடத்திய பயங்கர பாலியல் தாக்குதலின் காரணமாக எனது பெயரும் அடையாளமும் காணாமல் போனது. என் மீது எந்த தவறும் இல்லாத பட்சத்திலும் என்னை அவமானப்படுத்த பல முயற்சிகள் செய்தனர். எனக்காக தற்போது பலரும் குரல் எலுப்பி வருகின்றனர். எனக்கு ஆதரவை தொடர்ந்து கொடுத்து கொண்டே இருங்கள். சரியான நீதி கிடைக்க வேண்டும் எனவும் இனி இதுபோல் யாருக்கும் நடக்க கூடாது எனவும் கூறியுள்ளார். இதனால் தற்போது மீண்டும் இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here