கென்யா நாட்டில், ஈத்-அல்-பித்ர் பண்டிகையை முன்னிட்டு, மே 3ஆம் தேதி அன்று ஒரு நாள் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக, அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதிரடி உத்தரவு:
கென்யா நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள், தங்களின் புனித பண்டிகையான ஈத்-அல்-பித்ர் கொண்டாடுவதற்காக, நோன்பு அனுசரித்து வருகின்றனர். ரம்ஜான் மாதத்தின் முடிவைக் குறிக்கும், ஈத்-அல்-பித்ர் தினத்தை கொண்டாட மே 3 செவ்வாய்க் கிழமை அன்று, நாடு முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நாளில், கென்யாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மக்கள், 30 நாட்கள் வரை மேற்கொண்ட நோன்பை முடிக்க, இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. தேசிய அரசாங்கத்தின் உள்துறை மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சரவை செயலாளர் ஃபிரெட் மதியாங்கி என்பவர் பொது விடுமுறைகள் சட்டத்தின் பிரிவு 2 (1) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி இந்த பொது விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்