தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் நேற்று “உலக புவி” தினத்தினை முன்னிட்டு தனது புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் மற்றும் தெலுங்கு சிந்மவின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான், கீர்த்தி சுரேஷ். பிரபல நடிகையின் மகளாக இருந்தாலும், இவருக்கு படவாய்ப்புகள் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. தனது நடிப்பு திறனின் மூலமாக இவர் தனக்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
வித்தியாசமான கான்செப்ட்டில் போட்டோஷூட் செய்த மைனா,லோகேஷ் – கண்கலங்கிய ரசிகர்கள்!!
இவர் தமிழில் முதன் முதலாக “ரஜினி முருகன்” திரைப்படத்தில் நடித்து தான் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். பின், தொடர்ச்சியாக ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளார்.
இவருக்கு பெரும் பெயரை எடுத்து கொடுத்த திரைப்படம் என்றால் அது “மகாநதி” இந்த திரைப்படம் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வசூலை குவித்தது.
இவர் தெலுங்கு மற்றும் தமிழ் இரு மொழிகளிலும் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். இப்படியாக இருக்க, நேற்று “உலக புவி தினம்” இதற்காக கீர்த்தி தான் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதில் கேப்ஷனாக “நம்மை பாதுகாக்கும் இயற்கையை நாம் பாதுக்காக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரசிகர்களும் அந்த புகைப்படங்களை லைக் செய்து வருகின்றனர்.