தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது 31 வயதான நடிகை கீர்த்தி சுரேஷ் மாமன்னன், சைரன், ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தொழில் அதிபரை காதலித்து வருவதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை கீர்த்தி சுரேஷ் துபாயைச் சேர்ந்த தொழில் அதிபர் பர்ஹான் என்பவருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
எல்லாத்தையும் இழந்து, கடைசில நடுத்தெருவுக்கு வந்துட்டோம்., பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் உருக்கம்!!
இந்த காதல் விவகாரம் குறித்து கீர்த்தி சுரேஷின் தந்தை முதன் முறையாக மனம் திறந்துள்ளார். அதாவது, ‘நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பர்ஹான் இருவரும் நல்ல நண்பர்கள். பர்ஹானுக்கு எங்களது குடும்பத்துடன் நல்ல தொடர்பு இருக்கிறது. இது போன்ற ஆதாரம் இல்லாத தகவல்களை வலைதளங்களில் வெளியிட வேண்டாம்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.