போட்ட கணக்கு தப்பாயிருச்சே… கண்ணீரும் கம்பலையுமாக கீர்த்தி சுரேஷ்!!!

0

‘உன் மேல ஒரு கண்ணு’ என்று இளைஞர்கள் அனைவரையும் தன் பின்னால் சுற்றவைத்தவர் தான் நம்ம  பென்னிகுயின் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த புதுசில் இவரை பற்றி பேசாத நபர்களும் இல்லை மீடியாக்களும் இல்லை. தற்போது அவர் தனது உடல் எடையை குறைத்து, கதாநாயகிக்கு  முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த திட்டம் தவிடு பொடியாகி விட்டது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தான் அழகாலும் உடலமைப்பாலும்  இளைஞர்கள் மத்தியில் தேவதையாக வலம் வந்தவர் கீர்த்தி சுரேஷ். தொடக்கத்தில் விஜய்,சூர்யா,சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து  அழகு கொஞ்சும் நடிப்பால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையை உருவாக்கி விட்டார். அவரது நலம் விரும்பி யாரோ ஒருவர் கூறிய அறிவுரை கேட்டு தனது உடல் எடையை கணிசமாக குறைத்து விட்டார். இதனால் தனக்கே உரிய அழகை இழந்து விட்டதாக அவரது ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அவர் நடித்த நடிகையர் திலகம் பெரும் வெற்றியடைந்தது. இதனை கருத்தில் கொண்டு இனி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்று அடம்பிடித்து வந்தார். இவ்வாறாக  பென்குயின், மிஸ் இந்தியா போன்ற படங்களில் நடித்தார். மேலும் இந்த படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாகின. மேலும் அவர் நினைத்த அளவுக்கு இந்த படங்களும் அவருக்கு கைகூடவில்லை, நஷ்டத்தையே ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதே மாதிரியான படம் தான் அவர் அடுத்து நடித்த குட்லக் சகி, இதாவது திரையரங்குகளில் வெளியாகும் இதன் மூலம் ஒரு நல்ல இடத்தை மீண்டும் பிடித்து விடலாம் என்று எண்ணிய கீர்த்தி சுரேஷ்க்கு ,  பெரிதும் அதிர்ச்சி செய்தி கிடைத்தது. அந்த செய்தி இந்த படமும் ஓடிடி தான் என்பதே. இதனால் செய்வது அறியாமல் வேதனையில் இருக்கிறாராம்.

Facebook   =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here