தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது நடுக்கடலில் செய்யும் அட்டகாசங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ்
குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமானவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் ஆரம்பத்தில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். அதன் பிறகு தான் தமிழில் நாயகியாக உருவெடுத்தார்.
விக்ரம் பிரபு உடன் தான் இவருக்கு முதல் திரைப்படம். ஆனால் அந்த படம் ஓடவில்லை. அதன் பிறகு தான் சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்து பிரபலமானார்.
ஒரே படத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அவரது எக்ஸ்பிரசன் அந்த அளவுக்கு வைரலானது. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தனுஷ் உடன் இவர் நடித்த தொடரி திரைப்படம் ஹிட் அடிக்கவே இவரது மார்க்கெட் எகிறியது.
விஜயுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். பிரபல மலையாள நடிகையின் மகள் என்பதால் இவர் திரையுலகில் பிரபலமடைவது அவ்வளவு சிரமமானதாக இல்லை.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் எனகலக்கி வந்தார். அவர் நடித்த மகாநதி திரைப்படம் அவருக்கு வேற லெவெலில் புகழை ஏற்படுத்தியது. தேசிய விருதும் பெற்றார். அதன் பிறகு தான் உடலை குறைக்கிறேன் என்று ஆள் அடையாளமே தெரியாமல் மெலிந்து போனார் கீர்த்தி.
இதனால் அவருக்கு படவாய்ப்புகளும் கிடைக்காமல் போனது. பல முயற்சிகளுக்கு பிறகு தான் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது நடுக்கடலில் அவர் செய்யும் காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.