கீரையில கூட்டு வச்சுருப்பீங்க… ஆனா கீரை தண்டுல இப்படி ஒரு குழம்பு செஞ்சுருக்கீங்களா??? உடனே செஞ்சு அசத்துங்க!!!

0

காய்கறிகள் போல கீரை வகைகளும் பல்வேறு சத்துக்களை கொண்டு உள்ளது. மேலும் கீரைஅதிக அளவில் இரும்பு சத்துக்களை கொண்டது. இதை நாம் அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் கண் குறித்த பிரச்சனைகள் ஏற்படுவது மிக குறைவு. தற்போது அப்படி அதிக சத்துக்கள் நிறைந்த கீரையில் ஒரு மிகவும் வித்தியாசமான தண்டு புளிக்கறி செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள்

தண்டு கீரை – 1கட்டு

தேங்காய் துருவல் – 1 கப்

சீரகம் -1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி

பூண்டு – 2

சின்ன வெங்காயம் – 6

புளி தண்ணீர் – சிறிதளவு

உப்பு -தேவையான அளவு

எண்ணெய் -தேவையான அளவு

கறிவேப்பில்லை -சிறிதளவு

வெந்தயம் – 1 தேக்கரண்டி

செய்முறை

முதலில் கீரை தண்டுகளை ஓரளவிற்கு நீளவாக்கில் நறுக்கி கொள்ளவேண்டும். அதன் பின்னர் இதை புளி தண்ணீர் மற்றும் உப்பு சேர்ந்து நன்றாக கொதிக்க விடவும். அதன் பின்னர் தேங்காய் துருவல்,சீரகம், சின்ன வெங்காயம்,மஞ்சள் தூள் சேர்ந்து நன்றாக அரைத்து கொள்ளவேண்டும். நன்கு வெந்து வந்த கீரை தண்டு உடன் அரைத்து வைத்த தேங்காய் கலவையை சேர்ந்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் சிறிதளவு புளி தண்ணீர் மற்றும் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும். குழம்பு பொங்கிவரும் வேளையில் அடுப்பை அணைத்து விடவேண்டும். அதன் பின்னர் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம்,வெந்தயம்,கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவேண்டும். தாளித்த அந்த கலவையை குழம்பில் சேர்த்து கொள்ளவேண்டும். தற்போது மணமான சுவையான கீரை தண்டு புளிக்கறி தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here