வெள்ளை மாளிகை ஊடக செயலாளரான கேய்லேய், பள்ளிகள் மீண்டும் திறப்பதில் அறிவியல் தலையிடக் கூடாது எனக் கூறியது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால், மிகவும் மோசமான நிலை உண்டாகும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது.
உலகத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அறிக்கைகள்:
2020-ம் ஆண்டின் பெரும்பகுதியை கொரோனா தோற்று அழித்துவிட்டது. இந்நிலையில், உலகத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வெளியிடும் அறிக்கைகள் மன உளைச்சலைக் கொடுக்கிறது.
உலகம் கொரோனா தோற்று நெருக்கடியில் சிக்கிக் கொண்ட போதிலும், டொனால்ட் ட்ரம்ப், ஜைர் பால்சோனரோ மற்றும் பல அரசியல்வாதிகள் சில அதிர்ச்சியூட்டும் அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.
ஊடக செயலாளரின் கேள்வி:
இவற்றுள் வெள்ளை மளிகை ஊடக செயலாளரான கேய்லேய் மெக்எனனி, பள்ளிகள் மீண்டும் திறப்பதில் அறிவியல் தலையிடக் கூடாது எனக் கூறியுள்ளார். இத்தொற்று பொருத்த நிலையில் அறிவியலை சார்ந்து இருக்கக் கூடாது எனில், எதனை சார்ந்து இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பி உள்ளது பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. .
கிருமித் தொற்றின் போது உலக நாடுகளின் நிலை
கிருமித் தொற்றால் 1,38,08,626 பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில், 5,89,978 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தொற்று நிலை மோசமான நிலைக்கு சென்றும், பல நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய வண்ணமே உள்ளன.
உலக சுகாதார அமைப்பும் நாடுகள் தவறான முடிவை எடுத்தால், மிகவும் மோசமான நிலை உண்டாகும் என அறிவுறுத்திய வண்ணம் உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்:
தொற்றானது ஆறரை மாதங்களில் அரை மில்லியனுக்கும் மேலான மக்களை கொன்றுவிட்டது. தடுப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்தால், எதிர்வரும் காலங்களில் பழைய நிலையை அடைய இயலாது என உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ராஸ் அதனோம் கிபிரியேசஸ் தெரிவித்துள்ளார். பல நாடுகள் தவறான முடிவை எடுப்பதினால், தொற்றானது பொது மக்களின் முதல் எதிரியாக உள்ளது என ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் வட்டாரம் தெரிவிக்கின்றன.