என்றென்றும் புன்னகை சீரியலில் கதாநாயகனாக வலம் வரும் நடிகர் தீபக்கிற்கும், கயல் சீரியல் துணை நாயகியான அபிநவ்யாவிற்கும் வரும் 27ம் தேதி அன்று திருமணம் நடைபெறவுள்ளது. திருமண சடங்குகள் பல கொண்டாடங்களுடன் இனிதே தொடங்கப்பட்டுள்ளது.
காதலியை கரம்பிடித்த தீபக்:
சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல், கண்மணி, ப்ரியமானவள், ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சித்திரம் பேசுதடி மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிவா மனசுல சக்தி போன்ற சீரியல்களில் நடிகை அபிநவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரும் திருமணம் சீரியலின் மூலமாக பிரபலமான நடிகர் தீபக் என்பவரும் ஒரு ஆண்டுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். தற்போது தீபக் ”என்றென்றும் புன்னகை” என்னும் தொடரில் நடித்து கொண்டிருக்கிறார்.
இருவரும் ஒன்றாக ரீலிஸ் செய்து அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தனர். சில மாதங்களுக்கு முன்பாக இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நிலையில் வரும் 27ம் தேதி அன்று சென்னையில் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்யவுள்ளனர். திருமணத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் திருமண கொண்டாட்டம் தற்போதிலிருந்தே தொடங்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் தளத்தில் இந்த தம்பதி வெளியிட்டுள்ளனர்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்