சன் டிவியின் கயல் சீரியலில் எழில் பாத்திரத்தில் நடித்து வந்த சஞ்சீவ், இந்தத் தொடரில் இருந்து வெளியேறி விட்டாரா? என்ற கேள்விக்கு அவரே பதிலளித்துள்ளார்.
சஞ்சீவ் பதிவு:
சன் டிவியில் டாப் ரேஞ்சில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று கயல். இந்த சீரியலில் எழில் என்ற பாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து வந்தவர் சஞ்சீவ். கடந்த இரண்டு மாதங்களாக இவர் குறித்த காட்சிகள் சீரியலில் காட்டப்படவில்லை.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல், ஹீரோயினுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதால், சஞ்சீவ் இதிலிருந்து வெளியேறி விட்டதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்த தொடர் ஆரம்பித்து 400 வது எபிசோட் செலிப்ரேஷன் இன்று நடந்தது. இந்த கொண்டாட்டத்தில் சீரியல் பிரபலங்கள் அனைவரும் இணைந்திருந்தனர்.
அப்போது நடிகர் சஞ்சீவ், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்து விட்டேன் என பதிவிட்டுள்ளார். இதை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கி உள்ளனர். இதை வைத்துப் பார்க்கும்போது அவர் இனி இனியா சீரியலில் நடிக்க வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.