செப்டம்பரில் திரைக்கு வரும் ‘ஜப்பான்’…..,அடுத்த த்ரில்லர் ட்ரீட் ரெடி….,

0
செப்டம்பரில் திரைக்கு வரும் 'ஜப்பான்'.....,அடுத்த த்ரில்லர் ட்ரீட் ரெடி....,
செப்டம்பரில் திரைக்கு வரும் 'ஜப்பான்'.....,அடுத்த த்ரில்லர் ட்ரீட் ரெடி....,

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. அதாவது, ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்துள்ள இந்த திரைப்படம் த்ரில்லர் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது நடிகர் கார்த்தி நடிக்கும் 25 ஆவது திரைப்படம் ஆகும்.

இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து நடிகை அனு இம்மானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படப்பிடிப்பு அடுத்த 30 நாட்களில் முடிப்பதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஜூன் இறுதிக்குள் தயாராகும் ‘லியோ’….,படக்குழு தகவல்….,

அந்த வகையில், ‘ஜப்பான்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்றதும் இப்படத்தை செப்டம்பர் மாதத்திற்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும், நடிகர் கார்த்தி இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here