பிரபல நடிகரான சிவகுமாரின் இளைய மகன் தான் கார்த்தி. லேட்டாக சினிமாவிற்கு வந்தாலும் மக்கள் மத்தியில் வேகமாகவே இடம் பிடித்து விட்டார் என்றே சொல்லலாம். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கார்த்திக்
தமிழில் அமீர் இயக்கிய பருத்தி வீரன் படம் மூலம் அறிமுகமானவர் தான் கார்த்தி. சூர்யா சிறு வயதிலேயே சினிமாவிற்கு நுழைந்தவர். ஆனால், கார்த்தி நீண்ட வருடங்களுக்கு பிறகே சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். கார்த்தியின் முதல் படமான பருத்தி வீரன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அவரது நடிப்பும் முதல் படத்தை போல இல்லாமல் அந்த கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்திருப்பார். பருத்தி வீரனுக்கு பிறகு பல பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தது. இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. பருத்தி வீரன் படத்தில் ரௌடியாக நடித்த கார்த்திக்கு அடுத்தடுத்து அந்த மாதிரியான கதாபாத்திரமே கிடைத்தது.
மேலும் தமன்னாவிற்கும், இவருக்கும் காதல் இருந்ததாக கிசுகிசுக்கள் வெளியாகின. சூர்யா ஜோதிகாவை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் கார்த்தி பெற்றோர் பார்த்து வைத்த உறவினரின் மகளாகிய ரஞ்சினியை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
Dear friends and family, we are blessed with a boy baby. We can’t thank enough our doctors and nurses who took us through this life changing experience. ?? need all your blessings for the little one. Thank you god!
— Actor Karthi (@Karthi_Offl) October 20, 2020
அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்த கார்த்திக்கு தீரன் அதிகாரம் ஒன்று செம ஹிட் அடித்தது. இத்தனை வருடங்களாக நடிகராக இருந்த சூர்யாவையே ஓவர் டேக் செய்தார் என்றே சொல்லலாம். கார்த்தி ரஞ்சனி தம்பதிகளுக்கு உமையாள் என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது ரஞ்சனிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கார்த்தி.