கர்நாடக மாநிலத்தில், பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அங்கு பள்ளிகளுக்கு 2-3 நாட்கள் விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அரசு உத்தரவு :
கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, இந்தியாவில் பெரும்பாலான மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில், கடந்த திங்கட்கிழமை 1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் கடந்த சில தினங்களாக வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக, மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால், அம்மாநிலத்தில் 2-3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என, பொது அறிவுறுத்தல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த மாநிலத்தின் தசரஹள்ளி மண்டலத்திலுள்ள, 2 பள்ளிகளைச் சேர்ந்த 31 மாணவர்களுக்கு வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில், 21 பேருக்கும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. மாநிலத்தில், மக்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு அரசு அறிவுறுத்தி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்