மாநிலத்தில் தளர்த்தப்படுகிறதா ஊரடங்கு கட்டுப்பாடுகள்?? – ஆலோசனைக்கு பின் முதல்வர் நாளை அறிவிப்பு!!

0

நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில், தொற்று பரவல் சற்று குறைந்துள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றிய முக்கிய ஆலோசனை கூட்டம், முதல்வர் தலைமையில் நாளை நடைபெற உள்ளது.

நாளை அறிவிப்பு:

நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் அதிகரித்து காணப்பட்டது. மேலும், கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் முதல் முறையாக இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் டிசம்பர் 28 முதல் இரவு நேர ஊரடங்கும், ஜனவரி 7 முதல் வார இறுதி ஊரடங்கு விதிக்கப்பட்டது. அரசு உத்தரவு படி ஜனவரி 19ஆம் தேதி ஆன  நேற்றுடன்  இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தது. மாநிலத்தில் தொற்று பரவல் சற்று குறைந்துள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டால், தங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என பல்வேறு தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதிலும் குறிப்பாக, பார் உரிமையாளர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் இந்த இரவு நேர ஊரடங்கை, இரவு 10 மணிக்கு பதிலாக 11 மணிக்கு அமல் படுத்தினால் தங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என தெரிவித்தனர்.  இதனை அடுத்து, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நாளை மருத்துவ அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here