கண்ட நேரத்தில் கண்ட இடத்திற்கு போனால் நாங்கள் என்ன செய்ய முடியும் – அமைச்சர் பேச்சால் வெடித்த சர்ச்சை!!

0
பட்டப்பகலில் இளம்பெண்ணை கற்பழித்த 4 ரயில்வே ஊழியர்கள் - டெல்லியில் நடந்த பகிர் சம்பவம்!

கர்நாடகாவில் மைசூருவில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் கர்நாடக அமைச்சர் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கல்லூரி மாணவர் ஒருவர் தன் காதலருடன் இரு நாட்களுக்கு முன், சாமுண்டி மலை அடிவாரத்துக்குச் சென்றுள்ளார். இந்த மாணவி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால் அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், காதலனை தாக்கி விட்டு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தப்பி சென்றுள்ளனர்.

தற்போது அந்த மாணவி மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் பெற்று வருகிறார். இந்த சம்பவம் மைசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி கர்நாடக அமைச்சர் அரக ஞானேந்திரா பேசியுள்ளார். அதில் அவர் அந்த மாணவி ஏன் அந்த நேரத்தில் அங்கு செல்ல வேண்டும்? கண்ட நேரத்தில் கண்ட இடத்துக்கு சென்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்? என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

பிறகு அந்த அமைச்சர் பேசியதை சுட்டிக்காட்டி பேசிய அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அமைச்சர் அரக ஞானேந்திராவின் கருத்துகளை ஏற்க முடியாது. மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி அவருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதை தொடர்ந்து அமைச்சர் அரக ஞானேந்திரா அவர் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here