கர்நாடகாவில் பாரம்பரியமான கம்பளா (எருது விடும்) போட்டி நடைபெறுவது வழக்கம். அதில் கலந்து கொண்ட சீனிவாச கௌடா என்ற 28 வயது நிரம்பிய இளைஞர் 142.50 மீட்டர் தூரத்தை 13.62 வினாடிகளில் கடந்து இந்திய மக்கள் கவனத்தை தன் பக்கம் இழுத்துள்ளார். இதனால் இவருக்கு முறையான பயிற்சி அளித்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உசைன் போல்ட் 9.58 வினாடி..!
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
உலக தடகள சாம்பியன் உசைன் போல்ட் 100மீ ஓட்டத்தில் 9.58 வினாடிகளில் இலக்கை அடைந்தது தற்போது வரை உலக சாதனையாக உள்ளது. இதனை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 7 வருடங்களாக எருது விடும் போட்டியில் பங்கு பெரும் இளைஞர் முறியடித்து உள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
அவர் உலக சாம்பியன்.. நான் வயலில் ஓடுபவன்..!
தன்னை உசைன் போல்ட் உடன் ஒப்பிட்டு பேசுவது குறித்து தெரிவித்த சீனிவாச கௌடா அவர் உலக சாம்பியன் நான் வயல்வெளியில் ஓடுபவன் என தெரிவித்து உள்ளார்.
இவரின் திறமை குறித்து பல ஊடகங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அவரை தேசிய விளையாட்டு மையத்திற்கு அழைத்து அவரின் திறமையை சோதிக்க முடிவு செய்து உள்ளதாக தெரிவித்து உள்ளார். திறமைகள் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அது வீணடிக்கப்படாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |