கர்நாடகா உடுப்பி பகுதியில் உள்ள அரசு கல்லூரிக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கல்லூரி நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்த விஷயம் அம்மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் மீது வழக்கு தொடங்க பட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கின் முடிவில் பள்ளி, கல்லூரிகள் ,மற்றும் தேர்வு மையங்களில் ஹிஜாப் அணிய அனுமதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் மீண்டும் கர்நாடக அரசு ஹிஜாபுக்கு தடை விதித்து வெளியிட்டுள்ளது. அதாவது இம்மாதம் 18 மற்றும் 19 ஆம் தேதியில் கர்நாடகாவில் நடக்க இருக்கும் போட்டி தேர்வுகளில் தலை, காது உள்ளிட்டவற்றை மறைக்கும் ஹிஜாப்களை அணிய தடை விதித்துள்ளது. அதாவது தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்காகவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தேர்வாணையம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் திடீர் ரெய்டு.., அரசு பறந்த அதிரடி உத்தரவு!!!