நடிகர் ரஜினி வரும் நவம்பர் மாதம் கட்சி தொடங்குவார் என கராத்தே தியாகராஜன் அவர்கள் அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்புக்காக நீண்ட நாட்கள் காத்திருந்த அவரது ரசிகர்கள் தற்போது உற்சாகம் அடைந்து உள்ளனர்.
ரஜினி அரசியல் என்ட்ரி:
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்து இருந்தார். சாதி, மத பாகுபாடுகள் இல்லாத ஆன்மிக அரசியலை முன்னெடுத்து செல்வேன் என தெரிவித்து இருந்த ரஜினி 234 தொகுதி சட்டமன்ற தேர்தலிலும் போட்டி இடுவேன் என தெரிவித்து இருந்தார். தமிழகத்தின் சிஸ்டம் சரியில்லை என கூறிய ரஜினி இந்த வருட ஏப்ரல் மாதத்திற்குள் கட்சி ஆரம்பித்து பெயர் மற்றும் கொடியை வெயியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு ஊரடங்கால் இந்த திட்டங்கள் தள்ளிப்போனது.
‘கிங் மேக்கர்’ – கல்வி கண்திறந்த ‘கர்மவீரர் காமராஜர்’ பிறந்தநாள் நாள் இன்று!!
இந்நிலையில் ரஜினி வரும் நவம்பர் மாதம் கட்சியை தொடங்குவார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்து உள்ளார். சென்னையில் பேட்டி அளித்த தியாகராஜன், கொரோனா பாதிப்பால் ரஜினி கட்சி தொடங்குவது ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நவம்பர் மாதத்திற்கு தள்ளிப்போனதாக கூறியுள்ளார். ரஜினி ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.