இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டுமானால், சில முக்கிய முடிவுகள் எடுத்து, தான் ஆக வேண்டும் என கபில் தேவ் கூறியுள்ளார்.
கபில் தேவ்:
அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடருக்காக பிசிசிஐயானது தற்போது இருந்தே, திட்டங்களை தீட்டி வருகிறது. அதாவது, இன்று முதல் தொடங்க உள்ள இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில், இந்திய அணியின் விராட் கோலி, ரோஹித் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ஆனால், இந்த சீனியர் வீரர்கள், இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள், இந்த ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பை தொடரில் முக்கிய பங்கு வகிக்க கூடுவர் என்பதற்காக பிசிசிஐயானது இனி தொடர்ந்து சீனியர் வீரர்களை ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அதிகம் விளையாட வைக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளன.
இலங்கைக்கு எதிரான இந்திய அணியில் இணைந்த பும்ரா…, அதிகாரபூர்வமாக வெளியிட்ட பிசிசிஐ!!
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ், விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சில சீனியர் வீரர்கள் இனி டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று கூறியுள்ளார். மேலும், விராட் கோலி, ரோஹித் உள்ளிட்ட வீரர்கள் உலக கோப்பையை வென்று தருவார்கள் என நினைக்க கூடாது. இந்தியா உலக கோப்பையை வெல்ல வேண்டுமானால், சில முக்கியமான முடிவுகளை எடுத்து தான் ஆக வேண்டும். இதனால், இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து, அடுத்த வருட டி20 உலக கோப்பையில் பலம் வாய்ந்த அணியை களமிறங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.