விரைவில் துவங்கும் ‘காந்தாரா 2’ படப்பிடிப்பு…, உற்சாகத்தில் ரசிகர்கள்….,

0
விரைவில் துவங்கும் 'காந்தாரா 2' படப்பிடிப்பு..., உற்சாகத்தில் ரசிகர்கள்....,
விரைவில் துவங்கும் 'காந்தாரா 2' படப்பிடிப்பு..., உற்சாகத்தில் ரசிகர்கள்....,

கன்னட மொழியில் கடந்த ஆண்டு வெளியாகி ஒட்டு மொத்த இந்திய சமூகத்தையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு திரைப்படம் ‘காந்தாரா’. காட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், அவர்களின் காவல் தெய்வம், பழக்க வழக்கங்கள், இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு உள்ளிட்ட கதைக்களங்களுடன் வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் நல்ல வரவேற்புகளை பெற்றது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதன் காரணமாக, குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நல்ல வசூலைப் பெற்றது. இந்த திரைப்படத்தை பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து இருந்தார்.

‘ஒவ்வொரு முறை பேட்டிங் செய்யும் போது’….,ஜடேஜா உருக்கம்….,

தொடர்ந்து, ‘காந்தாரா’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்புகளை அடுத்து அதன் 2 ஆம் பாகத்தை இயக்க இருப்பதாக இயக்குனர் ரிஷப் ஷெட்டி அறிவித்திருந்தார். இந்த நிலையில், ‘காந்தாரா 2’ படத்திற்கான திரைக் கதை முழுவதுமாக எழுதப்பட்டுள்ளதாகவும், விரைவில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here