நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படத்தின் 2 ஆம் பாகம் தொடர்பான பட வேலைகள் துவங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
காந்தாரா 2 திரைப்படம்
கன்னட மொழியில் வெளியாகி ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனம் ஈர்த்திருந்த சமீபத்திய திரைப்படம் ‘காந்தாரா’. பண்டைய கால வழிபாடுகள் மற்றும் பழக்கவழக்கங்களை அழகாக படம் பிடித்து காட்டிய இந்த திரைப்படம் மக்களின் வரவேற்பை சம்பாதித்தது. இதோடு இல்லாமல், மத்திய அரசின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதும் இந்த படத்திற்கு கிடைத்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
கடைசி ODI போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி….,இப்படியா நடக்கணும்….,
இப்படிப்பட்ட வரவேற்பை பெற்ற ‘காந்தாரா’ திரைப்படத்தின் அடுத்த பாகம் வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில், ‘காந்தாரா 2’ திரைப்படத்திற்கு கதை எழுதும் பணிகள் தற்போது துவங்கியுள்ளதாக இயக்குனர் ரிஷப் ஷெட்டி அறிவித்துள்ளார். இந்த இரண்டாம் பாகத்தையும் நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.