கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகையாக உள்ள நடிகை சஞ்சனா கல்ராணி தனது நண்பர் ராகுல் டான்சி என்பவர் மீது நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கு தொடர்ந்த நடிகை:
கன்னட திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக உள்ளவர் நடிகை சஞ்சனா கல்ராணி. அண்மையில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது விடுதலையாகி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது நெருங்கிய நண்பரான ராகுல் டான்சி என்பவரிடம் கடந்த 3 ஆண்டுகளாக பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார்.
அவர் மட்டுமல்லாமல், அவரின் நண்பர் உள்ளிட்ட மூன்று பேரின் வங்கி கணக்குகளுக்கும் பணம் அனுப்பியதாக தெரிவித்தார். இந்த நிலையில், முதலீட்டுக்கான எந்தவித வட்டியையும் கொடுக்காமல் பணத்தை திருப்பிக் கேட்டால் மிரட்டுவதாக குற்றம் அவர்கள் மீது சாட்டியுள்ளார். இதையடுத்து அவர்கள் மீது சஞ்சனா கல்ராணி நீதிமன்றத்தில் மோசடி வழக்கு போட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்