புனீத் ராஜ்குமார் இறந்த துக்கத்தில் உயிரிழந்த ரசிகர்கள் – சோகத்தில் மூழ்கிய மாநிலம்!!

0

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவை கேள்விப்பட்ட மூன்று ரசிகர்கள் துக்கம் தாளாமல் உயிரிழந்ததாக வந்த தகவலை அடுத்து மொத்த மாநிலமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

உயிரிழந்த ரசிகர்கள் :

கன்னட திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக விளங்கிய புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியில் இருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியாகியது.

இதனை அடுத்து, அவரது இந்த திடீர் மறைவு கன்னட திரை உலகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை ஒட்டி, மாநிலத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அவரது மறைவை கேட்டு துக்கம் தாளாமல் கர்நாடக மாநிலம், பெல்காம் நகரத்தைச் சேர்ந்த ராகுல் மற்றும் முனியப்பன், பரசுராம் உள்ளிட்ட மூன்று ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here