39 வயதில் பிரபல நடிகர் திடீர் மரணம்…,சோகத்தில் தத்தளிக்கும் திரையுலகம்….,

0
39 வயதில் பிரபல நடிகர் திடீர் மரணம்...,சோகத்தில் தத்தளிக்கும் திரையுலகம்....,
39 வயதில் பிரபல நடிகர் திடீர் மரணம்...,சோகத்தில் தத்தளிக்கும் திரையுலகம்....,

கடந்த மாதத்தில் தென் இந்திய சினிமாவுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்திருந்தது திரைப் பிரபலங்களின் மரணம் தான். அந்த வகையில், நடிகர் மனோபாலா, சரத் பாபு உட்பட சில மரணங்கள் தமிழ் திரைத்துறைக்கு பெரும் இழப்பாக இருந்தது. இந்த வரிசையில், 39 வயதான கன்னட நடிகர் நிதின் கோபி மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்துள்ளார்.

நடிகர் நிதின் கோபி ‘ஹலோ டாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து கன்னட மொழியில் வெளியான முத்தினந்த ஹெண்டதி, கேரளித கேசரி, சிரபாந்தவ்யா, நிஷ்யப்தா உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தவிர, கன்னட மொழியில் உருவான சின்னத்திரை தொடர்களில் நடித்தும், சில தொடர்களை இயக்கியும் இருந்தார் நிதின் கோபி.

திருமணத்திற்கு தயாராகும் சசிகுமார் பட நடிகை…..,காதலர் இவர் தானாம்….,

தற்போது, பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்த நடிகர் நிதினுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவனைக்கு சென்ற அவர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், மீண்டும் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட தனது வீட்டிலேயே மரணமடைந்துள்ளார் நிதின். இந்த தகவல் கன்னட திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here