தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் ஆன்லைன் மூலம் பல தவறான செயல்களை மக்கள் செய்து வருகின்றனர். குறிப்பாக பெண்களின் முகத்தை மாப்பிங் செய்து அதை இணையத்தில் பதிவிட்டு பணங்களை சம்பாதித்து வருகின்றன. அதன்படி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் வாழும் இளம் பெண்கள் தங்களது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த புகைப்படங்களை எடுத்து ஒரு கும்பல் ஒரு விபச்சார செயலி ஒன்றை உருவாக்கி அதில் அந்த புகைப்படங்களை பதிவிட்டு, நாளைய தலைமுறையினர்-களை ஏமாற்றி பண மோசடி செய்து வருவதாக காவல்துறைக்கு புகார் எழுந்தது. இந்தப் புகாரின் பெயரில் விசாரணையை தொடங்கிய காவல்துறை இந்த விபச்சார செயலியை உருவாக்கிய கும்பலை கைது செய்தனர். அதில் மஞ்சுநாத், மல்லிகார்ஜுன், அனுமேஷ், ராஜேஷ், மோகன் மற்றும் மஞ்சுநாத் என்ற சஞ்சு ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மைனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்., 100 நாள் பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைச்சிருச்சு!!
இந்த கும்பலில் இருக்கும் மஞ்சுநாத் என்ற சஞ்சு என்பவர் சில கன்னட திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் பெரிதாக பணம் சம்பாதிக்க முடியாததால், தனது கூட்டாளிகளுடன் இந்த செயலை செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த பாலியல் தொழில் மோசடியில் மூல காரணமாக மஞ்சுநாத் செயல்பட்டிருப்பது காவல்துறையினர் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.