பிரபல நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழ் ரசிகர்களுக்கு தாம் தூம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து ஹிந்தி திரை உலகில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார். தனு வெட்ஸ் மனு, கிரிஷ் 3 ஆகிய வெற்றிப்படங்களில் நடித்து உள்ளார்.
தமிழில் தற்போது இவர் நடித்த தலைவி படம் வெளியாகியுள்ளது. இவருடன் பிரியாமணி, நாசர், அரவிந்த்சாமி ஆகியோர் சேர்ந்து நடித்துள்ளனர். இந்நிலையில் சென்ற வருடம் இறந்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்குப் பிறகு, பேட்டி ஒன்றில் தம்மை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கங்கனா ரணாவத் மீது பாடலாசிரியர் ஜாவித் அக்தர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை மும்பை மெட்ரோபொலிட்டன் நீதிமன்றத்தில் வந்த போது கங்கனா உடல் நிலை சரி இல்லாததால் நேரில் ஆஜராகவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். பின்னர் விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்று நேரில் ஆஜராகாவிட்டால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்