இன்று தலைவி படத்தின் ட்ரைலர் வெளியானது. தற்போது இதுகுறித்து பேசிய நடிகை கங்கனா தனக்கு இதுவரை எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்று தனது மனக்கவலையை தெரிவித்துள்ளார்.
கங்கனா ரணாவத்:
தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதலமைச்சரான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் தற்போது உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். மேலும் எம்ஜிஆர் ஆக நடிகர் அர்விந்த் சாமி நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு படப்பிடிப்பின் போதே பல சர்ச்சைகள் கிளம்பியது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இருந்தும் இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. மேலும் இந்த படத்திற்காக தனது மொத்த வித்தையையும் இறக்கியுள்ளார் நடிகை கங்கனா. இந்நிலையில் இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் 23ம் தேதி வெளியாகவுள்ளது. இன்று நடிகை கங்கனா ரணாவத்தின் பிறந்தநாள். இதனை சிறப்பிக்கும் வகையில் தற்போது தலைவி படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஜெயலலிதாவை உரித்து வைத்திருக்கும் கங்கனா ரனாவத் – ‘தலைவி’ ட்ரைலர் வெளியீடு!!
தற்போது இதுகுறித்து நடிகை கங்கனா ரணாவத் மிக உருமகமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, இதுவரை எந்த இயக்குனரும் எனக்கு தக்க மரியாதையை வழங்கியது இல்லை. மேலும் எனக்கான உரிய அங்கீகாரத்தையும் தரவில்லை. ஆனால் இயக்குனர் விஜய் என் திறமையை அருமையாக புரிந்து கொண்டார். மேலும் அவர் என்னை அணுகிய விதம் எனக்கு பிடித்திருந்தது என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.