ஹைதராபாத்திலுள்ள அப்பல்லோ மறுத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் என அவரது நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அனுமதி:
கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த 14ம் தேதி முதல் மீண்டும் துவங்கப்பட்டு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் படப்பிடிப்பில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 4 பேருக்கு பாதிப்பு இருப்பதாக கண்டறியபட்டதை தொடர்ந்து, ரஜினிகாந்துக்கும் கொரோனா இருப்பதாக செய்தி பரவியது. படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன் பிறகு அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனவும், பாதுகாப்பு கருதியே அவர் தன்னை தனிமைபடுத்திக் கொண்டதாகவும் அவரது தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் சென்னை திரும்ப விருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் அவர் நேற்று திடீரென ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல பரவியது. அவரது ரசிகர்களும் மிகுந்த கவலை அடைந்தனர். ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா மட்டும் உடனிருந்து கவனித்து வரும் நிலையில் “அவரது ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும்” மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
சுனாமி தாக்குதலின் 16ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – கடலில் பால் ஊத்தி அஞ்சலி செலுத்தும் மக்கள்!!
இது பற்றி, ரஜினிகாந்தின் நீண்ட கால நண்பரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நண்பர் ரஜினிகாந்ந் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்” என பதிவிட்டு உள்ளார். இதற்கிடையில் ரஜினிகாந்த் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.