மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.அந்த கோரிக்கையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு பற்றி கமல் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டாலினுடன் கமல் கோரிக்கை..
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் கொரோனா சூழலில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்.கொரோனாவின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் வருகிறது. இது மிகவும் வேதனையாக இருக்கின்றது.அதுமட்டுமல்லாமல் மத்திய அரசுக்கு எரிபொருட்களின் விலையை குறைப்பதற்கு மனதும் இல்லை என தெரிகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதேபோல் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தேர்தல் அறிக்கையாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலைகள் குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தனர் ,அதை தமிழக முதல்வரும் மக்கள் கட்சியின் தலைவருமான மு க ஸ்டாலின் அவர்கள் உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதைப்பற்றி மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் கமலஹாசன் அவர்கள் கூறியுள்ளார்.