சம்பளத்துக்காக அப்பவே சொல்லி அடிச்ச ஆண்டவர்.., ஆடிப்போன தயாரிப்பாளர்! உலகநாயகன்னா சும்மாவா?

0
சம்பளத்துக்காக அப்பவே சொல்லி அடிச்ச ஆண்டவர்.., ஆடிப்போன தயாரிப்பாளர்! உலகநாயகன்னா சும்மாவா?
சம்பளத்துக்காக அப்பவே சொல்லி அடிச்ச ஆண்டவர்.., ஆடிப்போன தயாரிப்பாளர்! உலகநாயகன்னா சும்மாவா?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அற்புதமாக நடித்து அசத்துபவர் தான் நடிகர் கமல்ஹாசன். தற்போது இவர் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் 90ஸ் காலகட்டத்தில் ஒரு படத்திற்காக சம்பளம் அதிகம் கேட்டு சண்டை போட்டுள்ளார். அதாவது கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டு வெளியாகி வசூலை வாரி வாரி குவித்த திரைப்படம் தான் அவ்வை சண்முகி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்தில் உலகநாயகன் 50 வயது லேடி கெட்டப் போட்டு நடித்து அசத்தியிருப்பார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் இவரே லேடி வாய்ஸில் பேசியுள்ளார். இதை தொடர்ந்து இப்படத்தில் அதிகமாக மெனக்கெட்டு நடித்ததால் உலகநாயகன் தயாரிப்பாளரிடம் 1.5 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போதைய காலகட்டத்தில் அந்த தொகை மிகவும் அதிகமானது என்பதால் தயாரிப்பாளர் முடியாது என்று மறுத்துவிட்டார்.

என்னையும் Adjustment க்கு கூப்பிட்டாங்க., கதறிய செம்பருத்தி கார்த்திக் ராஜ் சீரியல் நடிகை! என்னங்க சொல்றீங்க?

அதன் பின்னர் தனது மூளையை கசக்கி தரமான திட்டத்தை தீட்டினார். தயாரிப்பாளர் NO சொன்ன பின்னர், கமல் அப்படி சம்பளம் கொடுக்க முடியாது என்றால் நான் சொல்லும் ஏரியாக்களில் வெளியீட்டு உரிமையை எனக்கு தாருங்கள் என்று கேட்டுள்ளார். அதில் எவ்வளவு பணம் வரபோகிறது என்று தயாரிப்பாளர் சரி ஓகே என்று சொல்லிவிட்டார்.

இவர் ஓகே சொன்ன அதிர்ஷ்டமா என்று தெரியவில்லை, கமல் சொன்ன அந்த நான்கு ஏரியாவிலும் படம் அமோகமா ஓடி கிட்டத்தட்ட 5 கோடிகளை பெற்று தந்தது. இந்த விஷயத்தைக் கேட்டதும் தயாரிப்பாளர் அரண்டு போனார். நம்ம கமல் கேட்ட சம்பளத்தையே கொடுத்துருக்கலாமோ என்று மனதில் நினைத்து கொண்டார். உலகநாயகனின் தந்திர புத்தியால் 4 மடங்கு லாபத்தை அள்ளி தற்போது வரை சகலகலா வல்லவனாக திகழ்ந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here