தேர்தல் பிரச்சார வேலைகளுக்காக கோவை சென்ற கமல்ஹாசன் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் ரைடு குறித்து அதிரடியாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்:
மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுகிறார். மேலும் இந்த முறை அவர் கோவை பகுதியில் போட்டியிடுகிறார். இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு சில தினங்களே இருக்கும் நிலையில் அவர் மிக தீவிரமாக தனது அரசியல் வேளைகளில் இறங்கி வருகிறார். மேலும் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையையும் அவர் இன்று அதிரடியாக வெளியிட்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதில் மக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் தொழில் நடத்துவர்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில் பல திட்டங்களை அதில் அறிவித்திருந்தார். அவை அனைத்தும் மக்களை கவரும் வண்ணத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியினரின் வீட்டிற்கு ஐடி ரைடு சம்பவம் அரங்கேறி வந்தது.
லாரி வாடகையை கண்டித்து தீப்பட்டி ஆலைகள் ஸ்ட்ரைக் – மார்ச் 22 முதல் போராட்டம்!!
தற்போது கோவையில் உள்ள கமல் இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ரைடு வைத்து என்னை ஒன்னும் பண்ண முடியாது, இதற்கு பயப்படுற ஆள் நாள் இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார். மேலும் என்னை ரைடு நடத்தி அச்சுறுத்த பார்க்கிறார்கள் என்று தெரிவித்தார்.