
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே இருக்கும் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சில முக்கிய பகுதியில் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. இந்நிலையில் களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதி குறித்து வனத்துறையினர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்ததால், களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் உள்ள தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியை பார்வையிட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.