கொரோனாவால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது நடிகரும், கலைஞர் டிவியின் ஜெனரல் மேனேஜரான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா தொற்று காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார்.
ஃப்ளோரன்ட் பெரேரா
தமிழில் விஜய் நடித்த புதியகீதை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஃப்ளோரன்ட் பெரேரா. அதற்கடுத்து சிறிய கதாபாத்திரங்களில் சில படங்களில் நடித்திருந்தார். கயல் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். மேலும் அதனை தொடர்ந்து கொடிவீரன், தரமணி, தொடரி போன்ற படங்களிலும் நடித்து வந்தார்.
இவர் கலைஞர் டிவியின் ஜெனரல் மேனேஜர் என்பது குறிப்பிடத்தக்கது. 67 வயதான இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் திரையுலகமே அதிர்ச்சியடைந்துள்ளது.
மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ஃப்ளோரன்ட் சி. பெரேரா காலமானார்!
ஓம் ஷாந்தி !! pic.twitter.com/0X2IEwCwS0
— Dr.L.Murugan (@Murugan_TNBJP) September 15, 2020
மேலும் இவர் அண்மையில் தான் பாஜக.,வில் உறுப்பினராக சேர்ந்தார். மறைந்த ஃப்ளோரன்ட் பெரேராவுக்கு பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல் தெரிவிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.