தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி தகுதியானவர்களாக ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு உரிமை தொகை வழங்கும் நடவடிக்கை நேற்று (செப்டம்பர் 14) முதலே தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 15) காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தற்போது அனைத்து தகுதியான மகளிர்களுக்கும், அவர்களின் வங்கிக்கணக்கில் எவ்வித இடையூறுமின்றி ரூ.1,000 உரிமை தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இனி மாதந்தோறும் 15ஆம் தேதிகளில் ரூ.1,000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இத்திட்டத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்து X தளத்தில் “கலைஞர் உரிமைத் தொகை 1000” எனும் ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
TNPSC குரூப் 4 தேர்வர்களே…, இந்த முக்கிய கேள்விகளுக்கு விடை தெரியுதான்னு செக் பண்ணுங்க பாப்போம்!!