தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தனக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தினை வைத்திருந்த நடிகை தான் காஜல் அகர்வால். இவர் தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
காஜல் அகர்வால்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து கலக்கியவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழில் முதன் முதலாக நடிகர் பரத்துடன் “பழனி” என்ற திரைப்படத்தில் தான் நடித்தார். அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு தமிழ் துறையில் அவ்வளவாக ரீச் இல்லாமல் இருந்தார்.
நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிச்சிருச்சா?? அவரே வெளியிட்ட புகைப்படம்!!
இதனை அடுத்து இவர் தெலுங்கில் நடிகர் ராம் சரண் தேஜாவுடன் “மகதீரா” என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. இதனை அடுத்து காஜல் அகர்வால் பல படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆனார்.
அவர் தொடர்ச்சியாக தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். அதற்கு பின்பாக இவரது மார்க்கெட் டௌன் ஆகி விட்டது. இதன் காரணமாக காஜல் தனது குடும்ப வாழ்க்கை குறித்து யோசித்து பிரபல தொழிலதிபரான கிச்சுலுவை கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனை அடுத்து தற்போது தனது புகைப்படம் ஒன்றினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.