தீப்பெட்டி கணேசனை தொடர்ந்து “காதல்” பட நடிகர் மரணம் – திரைத்துறையினர் அதிர்ச்சி!!

0

தமிழ் திரைத்துறையில் தொடர்ந்து மரணங்கள் நடைபெற்று வருகின்றது. “காதல்” திரைப்படத்தில் விருச்சககாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் பாபு மரணம் அடைந்துள்ளார். அவர் யாருமே இல்லாமல் ஆட்டோவில் மரணமடைந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

“காதல்” திரைப்பட நடிகர்

தமிழ் திரையுலகில் தொடர்ந்து குணசித்ர நடிகர்கள் மற்றும் சிறிய வேடங்களில் நடிக்கும் நடிகர்கள் மரணம் அடைந்து வருகின்றனர். இதற்கு அவர்களது ஏழ்மை நிலையே காரணமாக இருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு துணை நடிகர் தவசி மருத்துவம் பார்க்க பணம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

யாருப்பா இந்த பிரஷித் கிருஷ்ணா?? இங்கிலாந்தை கதறவிட்ட பந்துவீச்சாளர்!!

அதே போல் நடிகர் “தீப்பெட்டி” கணேசன் தனது ஏழ்மை நிலை காரணமாக மரணம் அடைந்துள்ளார். இதனை அடுத்து தற்போது மீண்டும் அதிர்ச்சிகரமாக நடிகர் பாபு மரணம் அடைந்துள்ளார். இவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான “காதல்” திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருப்பார். இவருக்கு அந்த படத்திற்கு பின்பு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆட்டோவில் மரணம்

அதே போல் இவரது பெற்றோர்களும் மரணம் அடைந்துள்ளனர். இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்த பாபு கோவில்களில் பிச்சை எடுத்துள்ளார். இதனை அறிந்த சில திரை பிரபலங்கள் இவருக்கு உதவ முன்வந்துள்ளனர். குறிப்பாக, வில்லனாக நடித்து வரும் சாய் தீணா இவருக்கு வெகுவாக உதவியுள்ளார். ஆனால், பாபு மனரீதியாக பாதிப்பு அடைந்தவர் போலவே இருந்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து இவர் ஆட்டோவில் பரிதாபமாக மரணம் அடைந்துள்ளார். “தீப்பெட்டி” கணேஷன் மறைவினை அடுத்து தற்போது இவரது மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நடிகர்கள் சங்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இது குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here