அண்மையில் மறைந்த பாடலாசிரியர் கபிலனின் மகள் குறித்து அவர் உருக்கமான கவிதை ஒன்றை ஏழுதியுள்ளார்.
பாடலாசிரியர் கபிலன்:
தமிழ் சினிமாவில் 100 பாடல்களுக்கு மேல் எழுதி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பாடலாசிரியர் கபிலன். அந்த வகையில் விஜயின் ஆல்தோட்ட பூபதி நானடா, விக்ரமின் ஆசை ஆசை இப்பொழுது மற்றும் சிம்புவின் கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா போன்ற பாடல்கள் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது வெளியாக இருக்கும் பிசாசு, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக, கபிலனின் மகள் தூரிகை, கடந்த 9ம் தேதி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் கபிலனின் குடும்பத்தார், நண்பர்கள், திரையுலக கலைஞர்கள் பலரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது மகளின் பிரிவை தாங்க முடியாமல் கபிலன் ஒரு உருக்கமான கவிதை எழுதியுள்ளார். தற்போது அந்த கவிதை இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவரின் கண்ணீர் துளியால் எழுதிய கவிதையை பார்த்து ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.