நேற்று ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டி மூலம் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல், விராட் கோஹ்லி சாதனையை முறியடித்துள்ளார். தற்போது இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்து வருகிறது.
கே.எல்.ராகுல்
இந்தியாவில் தற்போது கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் தக்க கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 120 ரன்களை அடித்தது. பின்பு களமிறங்கிய ஐதராபாத் அணி மிக சிறப்பாக விளையாடி 121 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அனைவரையும் ஏமாற்றினார். இந்நிலையில் இவர் நேற்று அடித்த 4 ரன்கள் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோஹ்லியின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது இவர் நேற்று அடித்த 4 ரன்கள் மூலம் அதிவேகமாக 5000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
#SRHvsPBKS ஐபிஎல் போட்டி – அசத்தலான வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத்!!
இதற்கு முன்னதாக கேப்டன் விராட் கோஹ்லி 167 போட்டிகளில் 5000 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கே.எல்.ராகுல் தற்போது 5000 ரன்களை வெறும் 143 போட்டிகளில் கடந்து சாதனை செய்துள்ளார். தற்போது இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் ஐபிஎல் தொடரின் நாளைய (ஏப்ரல் 23) போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.