கொரோனா பரவல் அதிகம் இருக்கிறது. இதனை எதிர்க்க மக்கள் அனைவரும் தடுப்பூசிகளை மிக ஆர்வத்துடன் போட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழத்தில் உள்ள நீதிபதிகள், வழக்கறிங்கர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று மதுரை சேர்ந்த ஜோதிபாசு அளித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜோதிபாசு மனு தள்ளுபடி…
கொரோன ஊரடங்கு காலத்தில் ஓயாது உழைத்தவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள். இவர்கள் அனைவரும் கொரோனாவை எதிர்த்து அவர்களது வேலைகளில் குறையவும் தவறாது அவர்களது பணியில் ஈடுபட்டு உழைத்து வந்தனர். இந்நிலையில் அவர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு முன்கள பணியாளர்கள் என அரசு அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மதுரையை சேர்ந்த ஜோதிபாசு என்பவர் மனு ஒன்று அளித்தார். அதில் நீதிபதிகள், வழக்கறிங்கர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அவர்களுக்கு தடுப்பூசிகளை முன்னுரிமை அளித்து வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்து தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் தடுப்பூசிகள் மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கையிருப்பில் உள்ளது இதனால் அரசு தடுப்பூசி முகம் மற்றும் தேவைக்கான தடுப்பூசியை பெறுவதில் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இத்துடன் நீதிமன்ற வளாகங்களுக்குள் தடுப்பூசி முகாம்களை நடத்த கூறி மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்திலும் மற்றும் பார் கவுன்சிலிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தபடுகின்றன. முகாம் நடத்துவதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. எனவே இந்நிலையில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வாய்ப்பில்லை என்று கூறி இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்