தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாத சம்பளமும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்து உள்ளது.
ஜூலை மாத சம்பளம்:
தமிழகத்தில் Covid 19 பரவல் காரணமாக ஏற்பட்ட வருமான இழப்பினை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அரசு பிடித்தம் செய்யவில்லை. மாறாக தற்போது பணியில் இல்லாத ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 12,500 பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாத சம்பளம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்து உள்ளது. Covid 19 பரவல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.