நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு, நடப்பாண்டில் 2வது முறையாக ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக அதிகரிக்க உள்ளதாக தகவல் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாவிட்டாலும் கூட, அடுத்த மாதம் தசரா பண்டிகைக்குள் மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அப்படி அறிவிக்கும் பட்சத்தில் சம்பளம் உயர்வது மட்டுமல்லாமல் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கு உரிய அகவிலைப்படி நிலுவை தொகையும் சேர்த்து .கிடைக்கும். இதனால் அரசு ஊழியர்களுக்கு, அடுத்த மாதம் பெரிய அளவில் ஊதியம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.