ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி – ரூ.1.21 கோடி பரிசு தொகை அறிவிப்பு.., தட்டிச் செல்ல போவது யார்??

0
ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி - ரூ.1.21 கோடி பரிசு தொகை அறிவிப்பு.., தட்டிச் செல்ல போவது யார்??
ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி - ரூ.1.21 கோடி பரிசு தொகை அறிவிப்பு.., தட்டிச் செல்ல போவது யார்??

ஜூலியஸ் செஸ் ஆட்டத்தில் அர்ஜூன் எரிகைசி மற்றும் கார்ல்சன் ஆகிய இருவரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

பிரக்ஞானந்தா தோல்வி

ஜூலியஸ் செஸ் தொடருக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் ஜெய்மரை எதிர் கொண்டார். இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெறுவார் என அனைவரும் நினைத்தனர். ஆனால் அவர் செய்த சிறு தவறால் ஜெர்மனி வீரரிடம் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்திய வீரர் பிரக்ஞானந்தா காலிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அந்த அதிர்ச்சியை சரி செய்யும் வகையில் மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால் ரசிகர்கள் சற்று ஆறுதலில் உள்ளனர். அதே போன்று உலக சாம்பியன் கார்ல்சனும், வின்சென்ட் கீமரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

நாக்பூரில் பும்ராவின் மாயாஜாலம்.., பாராட்டிய ஆஸ்திரேலிய வீரர்.., மைதானத்தில் நடந்தது என்ன???

இதன் மூலம் இறுதி போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசியும், உலக சாம்பியன் கார்ல்சனும் போட்டியிட உள்ளனர். மேலும் இந்த இறுதி போட்டியில் வெற்றி பெறும் நபருக்கு ரூ.1.21 கோடி பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தொகையை யார் தட்டிச் செல்வார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here