கொரோனாவை உலகறிய செய்த புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் கொலை…!வெளியான அதிர்ச்சி செய்தி!!!

0

கொரோனா என்னும் கொடிய வைரஸ் நாடு எங்கும் பரவி மக்களுக்கு சொல்ல முடியாத பல துயரங்களை வந்து வருகிறது. இதன்  கோரமுகத்தை தன்னுடைய புகைப்படங்கள் மூலம் உலகிற்கு அறிய செய்த புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் மரணமடைந்து உள்ளார். இவர் கந்தகாரில் நடைபெற்று வரும் மோதலின் போது  கொல்லப்பட்டு  உள்ளார். இந்த செய்தி பலரை அதிர்ச்சி உள்ளாக்கி உள்ளது.

உலகில் நிலவும் பல்வேறு வித பிரச்சனைகளை வீட்டில் இருந்த படியே அறிந்து கொள்ள உதவுவது. சமூக வலைத்தளங்கள் மற்றும்  தொலைக்காட்சிகள் ஆகியன ஆகும். மேலும் அவற்றை  நமக்கு திறன்பட  வழங்க வேண்டும் என்பதற்காக பலர் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது செயலாற்றி வருகின்றனர். மேலும் பலர் தங்களின் உயிரை இழந்து உள்ளனர்.

இதே போல் ஒரு சம்பவம் தற்போது அரங்கேறி உள்ளது. அதாவது தானிஷ் சித்திக் என்ற புகைப்பட நிருபர் கந்தகார் மோதலை படம் பிடிக்க சென்ற போது கொல்லப்பட்டு உள்ளார். அதாவது ராய்ட்டர்ஸ் பத்திரிகையில் புகைப்பட நிருபராக பணியாற்றி வருபவர் தானிஷ் சித்திக். இவர் புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட நிருபர் ஆவர்.

இந்தியாவில் நிலவும் கொரோனா பாதிப்பு, டெல்லி வன்முறை உள்ளிட்ட பல நெருக்கடிகளை துல்லியமாக படம் பிடித்து மக்களுக்கு உணர்த்தியவர் தானிஷ் சித்திக். இவர் தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான் மற்றும் ஆப்கான் படைகளுக்கு இடையே நிலவிய மோதலை படம் பிடிக்க ஆப்கான் படைகளுடன் இணைந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில் அங்கு ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் கொல்லப்பட்டு உள்ளார். இந்த செய்தி அனைவரையும் மிகுந்த அதிர்ச்சி உள்ளாக்கி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here