இந்த ஆண்டு, இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஜோஃப்ரா ஆர்ச்சர் களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜோஃப்ரா ஆர்ச்சர்
இந்தியாவில் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் உலகப் புகழ்பெற்றது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு விளையாடும் இந்த IPL லீக் போட்டிகள் இம்மாத இறுதியில் துவங்க இருக்கிறது. இந்த போட்டிக்காக வீரர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு IPL போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஜோஃப்ரா ஆர்ச்சர் களமிறங்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இதையடுத்து காயத்தில் இருந்து மீண்டு வரும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த ஆண்டு மும்பை அணிக்கு திரும்புவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது.
‘போவோமா ஊர்கோலம்’…,5 லட்சம் விமான டிக்கெட்டுகள் இலவசம்….,ஹாங்காங் அரசு அதிரடி!!
அந்த வகையில், தற்போது ஜோஃப்ரா ஆர்ச்சர் மும்பை அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிய நிலையில், வலதுகை வேகப்பந்து வீச்ச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சரின் வருகை அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.